வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 1800 உறுப்பினர்களுக்கும் மேலாக ஆயுட்கால மற்றும் ஆண்டு சந்தா உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த சங்கம் முறையாக அரசாங்க பதிவு செய்யப்பட்டது.  வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது.... தற்போது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கு முழுமையாக வீடியோ எடுக்கும் மிக முக்கியமான வேலை உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தோம். அப்படியான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேலையை மிக நீண்டகாலமாகவும், நிரந்தரமாகவும் இந்த தொழிலை மட்டும் நம்பி இருக்கும் எங்களைப்போன்ற அரசு பதிவு பெற்ற சங்க உறுப்பினர்களுக்கு வழங்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதை அறிந்தோம்.

அதனால் மனஉளச்சல் அடைந்திருக்கிறோம் அனைத்து உறுப்பினர்களும். எங்கள் உறுப்பினர்கள் நிரூபர்களாகவும் வீடியோ மற்றும் புகைப்படக்கலைஞர்களாவும் நமது அரசு சார்ந்த செய்திகளை பல இன்னல்களுக்கும் இடையே மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகவும் கடுமையான பணியை தினமும் இரவு பகல் பாராமல் செய்துகொண்டுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

இப்படி அரசோடு இணைந்து செயல்படும் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு இந்த நல் வாய்ப்பை வழங்கி இருந்தால் எங்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், மேம்படவும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருக்கும். எங்களின் இந்த கோரிக்கையை ஏற்று தாங்கள் தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியை வழங்கிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision