யார் இந்த சாமி ரவி? ஏன் திடீர் சரண்டர் தகவல்

யார் இந்த சாமி ரவி? ஏன் திடீர் சரண்டர் தகவல்

திருச்சி மாநகரை பொறுத்த அளவு கே.கே.நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளவர். பல்வேறு கொலை, அடிதடி வழக்குகளில் தொடர், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர். தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக சாமி ரவி பற்றிய தகவல் காவல்துறை வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை தோகூர் காவல் நிலையத்தில் சாமி ரவி சரண்டர் ஆகபோவதாக அவருடைய ஆதரவாளர்கள் வழக்கறிஞர்கள் தகவல்களை கசிய விட்டு உள்ளனர். காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது இவர் மீது 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

குறிப்பாக கல்லணை அருகே தோகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக வி எஸ் எல் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சாமிரவிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவரை கைது செய்ய தேடி உள்ளனர். 4 மாத காலமாக அவர் தலைமறைவாக உள்ளார் என்பது காவல்துறையினர் தகவலாக உள்ளது.

அதில் காரைக்கால் ராம் கொலை வழக்கு உள்ளிட்டவைகளாம். முக்கியமாக அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் என பல்வேறு சோதனைகளை நடத்தி விசாரணை வளையத்தில் வைத்திருந்தனர். மேலும் திடீர் திடீர் என சாமி ரவி பற்றிய தகவல் போலீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தோகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என அவரை பற்றிய தகவல்களை காவல்துறையினர் சேகரித்து வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குற்ற செயல்களுக்கு முக்கிய மூளையாக இவர் செயல்பட்டு வருகிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் இவரிடம் எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து மற்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமி ரவியின் குற்றச்செயல்கள் அனைத்தும் மாவட்டம் மற்றும் மற்ற மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது அதிமுக முன்னாள் அமைச்சருடைய உடைய தேர்தல் செலவு பணம் பல கோடி வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு படுத்தி முக்கியமாக பேசப்பட்டவர் சாமி ரவி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision