காதல் விவகாரத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

காதல் விவகாரத்தில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபரீஷ் (24). இவருக்கும் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்ப்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்த போது இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் காரணமாக இருதரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில மாதமாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மண்ணச்சநல்லூரில் உறவினர் வீட்டில் இருந்த அந்த பெண்ணை பார்ப்பதற்காக சபரீஷ் நேற்று சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சபரீஷ் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரீசை கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision