Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஆற்றில் மீண்டும் ஒரு சோகம்

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மாலையில் இவர் தனது நண்பர் ராஜு என்பவருடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் மது அருந்திவிட்டு இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று விநாயகமூர்த்தி தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விநாயகமூர்த்தியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *