Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஸ்பா நடத்தி வந்த தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்குள்ள வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்த பொழுது இந்த ஸ்பா முழுவதும் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. அங்கிருந்து 2000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலாளர் லட்சுமி தேவி கைது செய்யப்பட்டுள்ளார். உரிமையாளர் யார் என்று கைதான லட்சுமி தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் செந்தில் என்பவர் உரிமையாளர் திருச்சி வயலூர் பகுதியில் சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் இவர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ரமா மசாஜ் சென்டரில் நடத்தி வரும் பெண்ணிடம் வழக்கிலிருந்து விடுவிக்க 3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டதால் இதனை அடுத்து திருச்சியில் விபச்சார தடுப்பு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *