Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுமி பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள பொம்மகம்மாவூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் யுவன்யா (6). இன்று இவர் தனது சித்தப்பாவுடன் டிராக்டரில் உழவு வேலையில் ஈடுபட்டிருந்த போது யுவன்யா டிராக்டரில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடலை வையம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *