Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 25 அடி ஆழ தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மகாலிகுடி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த வினோத்குமார் என்ற விவசாயி ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். 

இந்நிலையில் வீட்டில் ஜல்லிக்கட்டு காளை கட்டியிருந்த நிலையில் அந்தப் பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் வினோதின் ஜல்லிக்கட்டு காளையை முட்டி கயிறு அவிழ்ந்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை சேனையர் கள்ளக்குடி பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பழமையான சாக்கடை கிணறு தவறி விழுந்துள்ளது.

அதனை அவ்வழியாக சென்றவர்கள் அறிந்து சமயபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து ஜல்லிக்கட்டு காளைக்கு காயம் எதுவும் ஏற்படாமல் பத்திரமாக மீட்டு ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் 

இந்த சம்பவத்தில் 25 அடி ஆழத்தில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *