Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் உள்ள வாய்க்காலில் மூழ்கிக் கிடந்த சொகுசு கார்

திருச்சி கல்லணை சாலையில் உத்தமர் சீலை அருகே உள்ள வாய்க்காலில் சொகுசு கார் ஒன்று தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கொள்ளிடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் அந்த காரில் வந்தவர்கள் குறித்தும் விபத்து ஏற்பட்ட அந்த கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக போலீசார்ருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக திருச்சி நோக்கி வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் உருண்டு வாய்க்காலில் கவிழ்ந்து உபத்துக்குள்ளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இந்நிலையில் காரகாரில் வந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களின் நிலை என்னானது என்பது குறித்து கொள்ளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *