திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த (13.03.23)-ந் தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழைக்காய் மண்டி அருகில் டாஸ்மாக் பாரின் காசாளிடம் கத்தியை காட்டி மிரட்டியும் அவரிடம் இருந்த ரூ.2000/- பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில், மேற்கண்ட சம்பவத்தில் ஈடுப்பட்ட காமராஜர் நகரை சேர்ந்த ரவுடி தேவா (30), த.பெ.கணேசன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிரி தேவா என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லையில் அடிதடி ஈடுபட்டதாக 8 வழக்குகள், வழிப்பறி செய்ததாக 4 வழக்குகள், தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பளை செய்ததாக 4 வழக்குகள், பொதுஅமைதிக்கு தொல்லை கொடுத்ததாக ஒரு வழக்கு, கோட்டை காவல்நிலைய எல்லையில் 4 அடிதடி வழக்குகளும், பொதுஅமைதிக்கு தொல்லை கொடுத்ததாக 3 வழக்குகள் உட்பட 26 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, ரவுடி தேவா என்பவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் கத்தியை காண்பித்து வழிப்பறி குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments