Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரூ.1,85,000 மதிப்புள்ள குட்கா பதுக்கி வைத்திருந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுரைப்படி திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த (18.11.2023)-ந்தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வயலூர்ரோடு, சண்முகா நகர் சந்திப்பு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்தபோது சந்தேகம்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த சண்முகநகரை சேர்ந்த ஆனந்தராம் (38), த.பெ.நடராஜன் என்பவர் வைத்திருந்த 3 மூட்டைகளை சோதனை செய்தபோது, மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கூல்லிப் ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை கைப்பற்றியும், பின்னர் எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி அவரது வீட்டில் சோதனை செய்து அங்கிருந்த கூல்லிப் -25 கிலோ, ஹான்ஸ் 85 கிலோ, விமல்-47 கிலோ, வி ஒன் டொபாக்கோ-10 கிலோ மற்றும் RMD பான்மசாலா-3 கிலோ என சுமார் ரூ.1,85,000/- மதிப்புள்ள, 37 மூட்டைகளில் இருந்த 170 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும்இ எதிரி மீது வழக்குப்பதிவு செய்தும், குட்கா பொருள்களை கடத்த பயன்படுத்திய ஒரு இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், எதிரியை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் விசாரணையில் எதிரி ஆனந்தராம் பள்ளி அருகில் பள்ளி சிறார்களுக்கும் இந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார் என தெரியவந்ததையடுத்து இவரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி மேற்படி எதிரியினை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரி மீதான குண்டர் தடுப்பு ஆணை ணை சார்பு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரத்தில்இ சிறார்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்துஇ அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *