Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

12 கிலோ கஞ்சா வைத்திருந்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் தகாமினி உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி, கடந்த (16.06.2024)-ந் தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி ரோட்டில் இளைய சமூகத்தை சீரழிக்கும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வெள்ளை நிற பையில் வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைக்கபெற்ற தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் சுமார் 12 கிலோ கஞ்சாவை வெள்ளை நிற பையில் வைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்கா, அச்சங்குளத்தை சேர்ந்த செல்வம் (54) மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து மீது வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்வம் என்பவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி செல்வத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து செல்வம் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *