Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு 47 சுப்பிரமணியபுரம் ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மு.அன்பழகன், நகர் நல அலுவலர் விஜய் சந்திரன், உதவி ஆணையர் சாலை தவவளன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சண்முகப்பிரியா, எல்ஐசி சங்கர், சுகாதார ஆய்வாளர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு நோயாளிகள் பதிவு செய்யும் இடம், நோயாளிகள் காத்திருக்கும் பகுதி, மருத்துவர் அறை ஊசி மற்றும் சுருள் படம் எடுக்கும் இடம், மருந்து கிடங்கு, ஆய்வகம், காய்ச்சல் உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் நல மருத்துவர் அறை, ஸ்கேன் அறை, அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ அறை பேறுகால பின்கால கவனிப்பு அறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அறைகளை பார்வையிட்டார்.

மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்த்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், சுப்ரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக தரைத்தளம் மற்றும் முதல் தளம் கட்டப்படும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *