மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர்கள் கறிக்கடையில் வேலைபார்க்கும் காதர் மைதீன் (23), அவரது நண்பர் கல்லூரி மாணவர் அப்சர் (20) இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி இன்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து வளநாடு போலீசார் சம்பவ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments