Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மலைக்கோட்டை கோயிலுக்கு ரூ57 லட்சம் செலவில் புதிய தேர்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில்
அம்மனுக்கு ரூ 57.80 லட்சம் செலவில் புதிதாக தேர் செய்யும் திருபணி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தேரோட்டத்தின்போது சோமாஸ்கந்தராக தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை அம்மன் ஒரு தேரிலும், மட்டுவார்குழலம்மை அம்மன் தனித் தேரிலும் மற்றும் பஞ்சமூர்த்திகள் தனியாக சப்பரத்திலும் எழுந்தருளுவது வழக்கம்.

இதில் அம்மன் தேரின் உள் பகுதியில் சேதமடைந்து மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து, அதற்குப் பதிலாக புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சியில் உள்ள லயன் டேட்ஸ் நிறுவனம் ரு.57.80 லட்சம் மதிப்பில் புதிய தேர் உபயமாக வழங்க முன் வந்தது. அதன்படி, 13 அடி அகலம் மற்றும் 29 அடி உயரத்தில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த மரச்சிற்ப கலைஞர்களைக் கொண்டு புதிய தேர் வடிவமைக்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி உற்சவர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கோட்டத் தலைவர் மதிவாணன் மற்றும் அலுவலர்கள் கோவில் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *