Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வடமாநில தொழிலாளர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இன்று காலை எஸ்.புதூர் பகுதியில் உள்ள முன்புதரில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவர் சடலத்தை மீட்ட சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் முதல் கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் கடந்த வாட்டர் பாட்டில், பூச்சி மருந்து பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். பின்னர் வடமாநில தொழிலாளரின் உடலை கைப்பற்றிய சமயபுரம் போலீசார் உடற்கூறாய்வுக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த வடமாநில தொழிலாளர் விஷம் குடித்து இறந்து போனாரா? அல்லது அடித்து கொன்றார்களா? என சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *