Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ 

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே குட்செட் மேம்பாலம் பகுதி உள்ள ரயில்வே திருமண மண்டபம் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இங்கு பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த பகுதியில் சென்றவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலுள்ள அன்னை மதர் தெரசா கல்லூரியின் முன்னாள் மேலாளர் சந்திரசேகர் என்பவருடைய கார் பழுது காரணமாக திருச்சி குட்செட் மேம்பாலம் அருகில் உள்ள மெக்கானிக் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிக செலவு ஏற்படும் காரணமாக இரண்டு வருடங்களாக ஒரே இடத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் கார் இருந்த இடத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. அதில் தீ வைக்கப்பட்டதால் அந்த  காரில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இந்த தீ விபத்தால் குட்செட் மேம்பாலத்தில் அதிகப் புகை சூழ்ந்து கடும் புகைமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் சிரமத்திற்கு ஆளானார்கள். சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *