Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கடன் தொல்லையால் முறுக்கு வியாபாரி தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை அடுத்த கீழக்கருங்காடு பகுதியை சேர்ந்தவர் ராசு என்பவரது மகன் பாண்டி (32), இவருக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பாண்டி சொந்தமாக முறுக்கு தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் வியாபாரம் செய்யாமல் இருந்த பாண்டியிடம், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினார்கள். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்த பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *