Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி காவிரியை ரசித்த கவிஞரின் கவிதை வைரல்

திருச்சி வழியாக சென்ற கவிஞர் வைரமுத்து ஆர்ப்பரித்து செல்லும் காவிரி ஆற்றை ரசித்து வெளியிட்டுள்ள கவிதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சென்னையில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்வதற்காக திருச்சி வழியாக சென்ற கவிஞர் வைரமுத்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தை கடந்தார். அப்போது காவிரி ஆற்றில் இரு கரைகளும் தொட்டு சீறி பாய்ந்து ஓடும் நீரை கண்டு சாலை ஓரம் காரை நிறுத்தினர். பின்னர் காவிரி பாலத்தின் மீதிருந்து ஆற்றில் செல்லும் நீரின் அழகை ரசித்தார்.

இதைக்கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரிடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து காவிரி ஆற்றினை ரசித்த கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் ஒரு கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார். காவிரி ஆற்றின் அழகையும், அதன் வரலாறையும் எடுத்துரைத்து வெளியிட்டுள்ள இந்த கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருச்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது whatsapp ஸ்டேட்டஸில் இந்த கவிதையை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *