Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மனைவியிடம் நகை பறித்த இரண்டு இளம் பெண்களை போலீஸிடம் பிடித்துக் கொடுத்த கணவர் பரபரப்பு சம்பவம்

திருச்சி மத்திய பேருந்து கடந்த 08.07.22ம் தேதி சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்ற அன்புகரசி என்பவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து இறங்கியுள்ளார். உடுமலைப்பேட்டைக்கு செல்வதற்கு முன் கழிப்பிடத்திற்க்கு அன்புக்கரசி சென்றுள்ளார் அவர் பின் இரண்டு பெண்கள் தொடர்ந்து வந்து அவர்கள் தன்னுடைய பையை வைத்துக் கொள்ளவும் என்று சொல்லிவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளனர் பின்னர் அன்புகரசியும் அவர்களிடம் தனது பையை கொடுத்துவிட்டு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்க்கும் பொழுது இரண்டு பெண்களும் அங்கே இல்லை.

அவரின் கைபையில் வைத்திருந்த 4அரை பவுன் (முக்குத்தி செயின்) மொபைல் போன்,பாஸ்பேர்ட் உள்ளிட்டவைகளை நூதன முறையில் இரண்டு பெண்கள் அவரிடம் இருந்து  திருடி சென்றனர். இது தொடர்பாக அன்புகரசி திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இன்று(14.07.2022)அன்புகரசின் கணவர் மாரிமுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்  இரண்டு இளம் பெண்களையும் பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். இளம் பெண்கள் நந்தினி(20),ராஜலெட்சுமி(25) தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்க்கு வரும் பெண்களிடம், பயணிகளிடமும் தொடர் நகை கொள்கையில் ஈடுபட்டு வருவது முதற்கட்ட தகவலாக தெரியவந்துள்ளது. இப்பெண்களிடம் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *