Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

11 ஆண்டுகள் திருச்சி மத்திய சிறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றிய மோப்ப நாய் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியில் சூர்யா என்ற மோப்ப நாயும் போதைபொருள் கண்டுபிடிக்கும் பணியில் பினோ என்ற இரண்டு மோப்ப நாயும் பணியாற்றி வந்தன.

இதில் மோப்பநாய் சூர்யா கோவையில் 10 மாத காலம் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு திருச்சி மத்திய சிறையில் பணிக்கு அமர்த்தப்பட்ட தொடர்ந்து. 11 ஆண்டுகள் சிறையில் பணியாற்றி வந்த நிலையில் சூர்யாவுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதனையடுத்து தஞ்சையில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை செய்த பிறகும் குணமடையவில்லை.

இந்நிலையில் நேற்று மோப்பநாய் சூர்யா திடீரென உயிரிழந்தது. பின்னர் மோப்ப நாயின் உடலை திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். அங்கு சவப்பெட்டியில் வைத்து மோப்பநாய் சூர்யாவின் உடலை ஊர்வலமாக எடுத்து வந்து காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *