திருப்பூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் தாய் கங்கேஸ்வரி மற்றும் திருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (63), பாப்பாத்தி (58), சாந்தாமணி (56 ) ஆகியோருடன் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சிவகுமார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் மூழ்கி தவறி விழுந்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் சிவக்குமார் போராடி மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வந்த சேந்தமங்கலம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய் முன்னே மகன் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 
 
 
 
 
 
 

 13 May, 2024
 13 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments