Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பண்டிகை காலத்தை வரவேற்கும் பாரம்பரிய கேக் கலவை விழா!!

திருச்சி மாநகரில் உள்ள கோர்ட்யார்ட் மேரியட் திருச்சிராப்பள்ளியில் வருடாந்திர கேக் கலவை திருவிழா நடைபெற்றது. வருடத்திற்கு ஒருமுறை கோர்ட்யார்ட் மேரியட் நிர்வாகத்தினரால் நடத்தப்படுகிறது. அடுத்த வருட கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கவிருக்கும் ப்ளம் கேக்கிற்கான ஆயுத்தபணியாக நடைபெறும்.

இந்த நிகழ்வு குறித்து கூறுகிறார் ஃபுட் மற்றும் பேவேரேஜ் மேலாளர் சத்ய நாராயணன் ராவ் கூறுகையில்….. கோர்ட்யார்ட் மேரியட் திருச்சிராபள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வு பல வருட பாரம்பரியத்தை கொண்டது. 24 அக்டோபர் 2024 அன்று விழாவிற்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்களுடன் இந்த கேக் கலவை நிகழ்வு துவங்கியது.

கேக் கலவை என்பது உலர் ஃபியூட்கள், மசாலாப் பொருட்கள், சிட்ரஸ் பழங்களை ரம், பிராந்தி மற்றும் ஒயின் கலவையில் ஊறவைத்து, ஒரு வருடம் அவை முதிர்ச்சியடைவதற்கு விடப்படுகிறது. ஒருவருடத்திற்கு பின்பு கிறிஸ்துமஸ் விழாவிற்கு தேவையான பிளம் கேக்குகளின் அடிப்படையை உருவாக்க ஒரு அழகான கலவையாக இவை உருவாகியிருக்கும்.

இந்த நேசத்துக்குரிய பாரம்பரியம் பேக்கிங் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, இது சமூகம், படைப்பாற்றல் மற்றும் பருவத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாட ஒன்றுசேர்வது குறித்த நிகழ்வாகும் கேக்கை விட ருசியான நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்கும். இதில் விருந்தினர்களுடன் ஒன்றாகத் தொடங்கும்போது சிரிப்புகளால் இந்த நிகழ்வு எப்போதுமே ரொம்ப நெகிழ்வானதாக இருக்கும் என்றார். 

மேலும் கிறிஸ்துமஸ் மாதம் நெருங்கி வரும் நிலையில் அந்த பண்டிகைக்கே சிறப்பான பிளம் கேக்குகள், கிங்கர்பிரெட் குக்கீகள், கிங்கர்பிரெட் ஹவுஸ், பேனெட்டோன், ஸ்டோல்லேன் பிரட், யூல் லாக் போன்றவற்றை”டி-லோஞ்ச்” இல் டிசம்பர் 06, 2024 முதல் கோர்ட்யார்டு பை மேரியட் திருச்சிராப்பள்ளியில் கிடைக்கும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *