Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் தவத்திரு ரெங்கராஜன் தேசிக சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்

திருச்சி மாவட்டம் துறையூரை தலைமையிடமாகக் கொண்டு ‘ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பு மூலம் கடந்த 48 ஆண்டுகளாக ஆன்மீக தொண்டில் ஈடுபட்டவர் ஆவார்.

தனது 88-வது வயதில் வயது மூப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார். வடலூருக்கு அடுத்ததாக இவரது குடிலும் ‘அணையா விளக்கு’ என பெயர் பெற்று இலட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலகட்டத்தில் சாலையோரத்தில் வசதித்தவர்களுக்கு தினந்தோறும் உணவு அளித்தவர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் நுழைவாயில் நாள்தோறும் அன்னதானம் வழங்கி வந்தார். இந்த நிலையில் இவருடைய மறைவு ஏழை எளிய மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *