Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

நடிகர் விஜய் தந்தை கட்சியின் மாநில தலைவர் திருச்சி ஆர்.கே ராஜா ராஜினாமா!!

நடிகர் விஜய் கட்சி ஆராம்பித்துள்ளார் என தொடர்ந்து சர்ச்சை எழுந்த நிலையில் நடிகர் விஜய் எனக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய தந்தை கட்சிக்கு ரசிகர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் என்னுடைய புகைப்படம் எதுவும் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதற்கிடையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.குறிப்பாக

திருச்சியில் நடிகர் விஜய்க்கு நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையிலும், நடிகர் விஜய் ஒப்புதல் இல்லாமல் அவரின் பெயரில் கட்சி ஆரம்பித்து ரசிகர்களின் வாழ்க்கையை நாசம் செய்து விஜய் ரசிகர் மக்கள் இயக்கத்தை அழிக்க நினைத்தும், திருச்சியில் நான்தான் நிரந்தர மாவட்ட தலைவர் என்றும் சொல்லிக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றி, சர்ச்சையை ஏற்படுத்தி வரும் போலி ஆசாமி பத்மநாபன் (எ) ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் விஜயினால் திருச்சியில் புதுப்பிக்கப்பட்ட ரசிகர்கள் அணி சார்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் அ.இ.த.வி.ம.இ கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் திருச்சி பத்மநாபன் என்கிற ஆர்.கே ராஜா இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி காவல் துறையினர் புகார் அடிப்படையில் ஆர்.கே ராஜாவை தேடி வந்தனர்.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில் பத்மநாபன் என்கிற ஆர்.கே ராஜா இன்று கட்சியில் இருந்து விலகுவதாகவும் ராஜினாமா செய்வதாகவும் அதிகாரப்பூர்வமாக கடிதம் வெளியிட்டுள்ளார்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *