சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி மனோகரன், மாநகர காவல் ஆணையர் காமினி, எஸ் பி வருணன்குமார் உள்ளிட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் பங்கேற்பு.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்ற செயல்களை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகமான குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில், ரவுடிகள் பட்டியலை எடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments