திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையம் அருகே உள்ள அதிக திறன் கொண்ட ரெயில்வே மின்கம்பியில் உள்ள மின்மாற்றி அருகே திடீரென பயங்கர சப்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ரெயில்வே பணியாளர்கள் வந்து பார்த்த போது சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது. இதனால் ரெயில் பாதை மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் பாம்பை அப்புறப்படுத்தினர். மேலும் பழுதடைந்த மின்கம்பிகள் உடனடியாக சரிசெய்யப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments