எஸ் ஆர் எம் செயல்முறை மருத்துவக் கல்லூரியின் சார்பாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவரகளின் நலன் கருதி விழிப்புணர்வு பேரணி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இப்பேரணியை மாநகர காவல் துறை கண்காணிப்பாளர் என்.காமினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில்…… முதுகு தண்ட வடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மன உறுதியை இழக்காது இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவில் எஸ்ஆர்எம் செயல்முறை கல்லூரியின் மாணவ மாணவியர் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை எஸ்ஆர்எம் செயல்முறை முறை கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுரேஷ், எஸ்ஆர்எம் மேலாண்மை கல்லூரியின் செயல் இயக்குனர் டாக்டர் சம்பந்தம்,

எஸ் ஆர் எம் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமார் எபினேசர் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளின் துணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் ஆசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments