Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தொடரும் அராஜகம் – போட்டி போட்டு சென்ற தனியார் பேருந்துகள் – ஒருவர் பலி

திருச்சி மாநகரில் 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலைவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் பேருந்துகளுக்குள் போட்டி நடைபெறுகிறது.

குறிப்பாக விடியற்காலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை இந்த விபரீத நிகழ்வு நடந்து வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தெப்பக்குளம் வரை இந்த தனியார் பேருந்துகள் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சாலையில் செல்லும் பொதுமக்கள் பலியாவது வேதனைக்குரியதாக உள்ளது. குறிப்பாக தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது மோதி உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக 2025 புத்தாண்டு தொடங்கிய இன்று விடியற்காலை இரண்டு தனியார் பேருந்துகள் மேலப்புதூரிலிருந்து பாலக்கரை நோக்கி போட்டி போட்டு சென்றதில் சாலையில் சென்ற முதியவர் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அதிகளவு இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் முன் அனுபவம் இல்லாத இளம் வயது ஓட்டுனர்கள் பேருந்துகளை முறைப்படியே ஓட்டுவது இல்லை. வருமானத்தை பெருக்குவதற்காக சிலர் அது வாழ்க்கையை அழிக்கும் செயலில் இந்த ஓட்டுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலை 5 மணி அளவில் பயணிகளை ஏற்ற தொடங்கும் தனியார் பேருந்துகள் புதிதாக ஓட்டுநர் தொழிலுக்கு வருபவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இரவு பணி முடித்து மது அருந்திவிட்டு மீண்டும் அதிகாலை பணிக்கு வரும் ஓட்டுநர்கள் இது போன்ற முரட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.

எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும், தனியார் பேருந்துகள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு சென்று விபத்தை ஏற்படுத்துவதை தடுக்க மாநகர காவல் ஆணையர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *