Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு முன்னதாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு  பிரதான வாயிலில் முன்னதாக ஊர்வலமாக பதாதைகளை ஏந்தியவாறு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வாசங்களை ஏந்தி  கோஷங்கள் எழுப்பினர். 

தமிழன் சிலம்பம் பாசறையைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். சிறியவர்கள் முதல் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் தற்காப்பு கலைகளை செய்தனர். சிறுவன் வாள்வீச்சு,மான் கொம்பு வைத்து தற்காப்பு கலைகளை பயணிகளுக்கு அசார்த்தியமாக செய்து அசத்தினர்.

பெண் குழந்தைகளும் இளம் வயது ஆண்களும், பெண்களும் சிலம்பு,வாள் உள்ளிட்டவற்றை வெவ்வேறு விதமாக சுழற்றினர். தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *