Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் K.N.நேரு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் காவல்துறையினர் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட போதை பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது

திருச்சி இ ஆர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N. நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், காவல் ஆணையர் காமினி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாதைகளை ஏந்தி கொண்டு திருச்சி இ ஆர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை வழியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *