Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் யோகா பயிற்சியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் புதிதாக யோகா பயிற்சி காலை மற்றும் மாலை வேளைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் மாதாந்திர கட்டணம் ரூ.300-/ வீதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
எனவே, யோகா பயிற்சியாளராக பணி நியமனம் செய்வதற்கு, தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் பிரிவில் பட்டம்/டிப்ளமோ யோகா மற்றும் இயற்கை அறிவியல் சான்றிதழ் பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்குரிய விண்ணப்பத்தை 12.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கம் அலுவலகத்தில் நடைபெறும். மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண். 0431-2420685 / 7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட
ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *