Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவிர வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

இந்திய விமானப்படையினரால் நடத்தப்பட உள்ள அக்னிவீரவாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு (07.01.2025) முதல் (27.01.2025) வரை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம் எனவும் (22.03.2025) முதல் இத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிவீரவாயு பணிக்கு திருமணம் ஆகாதவராகவும் (ஆண் மற்றும் பெண்) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12- ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (01.01.2005) முதல் (01.07.2008) வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு (திருமணமாகாத ஆண்கள் மட்டும்) (29.01.2025) அன்று ஆட்சேர்ப்பு பேரணி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் கலந்துகொள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (03.07.2004) முதல் (03.07.2008) வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் மருத்துவ உதவியாளர் மருந்தாளர் விண்ணப்பதாரர்களுக்கு (ஆண்கள் மட்டும்) (04.02.2025) அன்று ஆட்சேர்ப்பு பேரணி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் கலந்துகொள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றதுடன் டிப்ளமோ அல்லது இளங்கலை பார்மசி முடித்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் (03.07.2001) முதல் (03.07.2006) மற்றும் திருமணமான ஆண்கள் (03.07.2001) முதல் (03.07.2004) வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *