Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி மகளிர் தனிச்சிறையில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையில் காலியாக உள்ள ஒரு துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இப்பணியிடத்திற்கான கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 

1) கல்வி தகுதி : தமிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். 

2) இட ஒதுக்கீடு : மிகவும் பிற்படுத்தப்பட்டோர் –பெண்கள் (MBC – General Priority – Women)

3) வயது வரம்பு : 01.07.2023 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4) ஊதிய விகிதம் : ரூ.15700-58100/- (Level-1) ஆகும்.

தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் கீழ்க்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களுடன் (31.10.2023)க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவண நகல்கள் : சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று, கல்வி சான்று (இருப்பின்). 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : சிறை கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை, காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில், திருச்சி-620008. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *