Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (03.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி இபி ரோடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இபி ரோடு, மணிமண்டப சாலை,காந்தி மார்கெட், கல்மந்தை, ராணித் தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, பெரிய சவுராஷ்டிராதெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்ன கடை வீதி, பெரிய கடைவீதி,

மதுரம் மைதானம், பாரதியார்தெரு, பட்டவர்த்ரோடு, கீழஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலி வார்ரோடு பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏபி.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை (03.01.2025) காலை 9:45 முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய தென்னூர் செயற் பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் போசம்பட்டி, அதவத்தூர் சந்தை, இனியானூர், மேலப்பட்டி, கொய்யாதோப்பு, முத்துபிளாட், சரவணபுரம், கீழவயலூர், போதாவூர், சுண்ணாம்புக்காரன்பட்டி, சாந்தாபுரம், முள்ளிக்கரும்பூர், புலியூர், பள்ளக்காடு,

வாசன்சிட்டி, புங்க னூர், எட்டரை, அல்லித்துறை, வியாழன்மேடு, கீரீக்கல்மேடு, நாச்சிகுறிச்சி, கோப்பு, செவகாடு, தாயனூர், ஒத்தக்கடை, மல்லியம் பத்து, குழுமணி, வாசன்நகர் விஸ்தரிப்பு, வாசன்வேலி, சோமரசன்பேட்டை,

அதவத்தூர், வயலூர், பேரூர் ஆகிய பகுதிகளில் நாளை (03.01.2925) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *