Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நாளை (16.10.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் அன்பு நகர் பீடரிலில் தவிர்க்க முடியாத அவசரகால பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்பு நகர்,

அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கொல்லமாங்குளம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

துவாக்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பெல் டவுன்ஷிப், நேரு நகர், அண்ணா வளைவு, அக்பர் சாலை, எம் டி சாலை, அரசு பாலிடெக்னிக், என்ஐடி,

ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், துவாக்குடி, துவாக்குடி தொழில்பேட்டை, பர்மா நகர், தேவராயநேரி, தேனீர் பட்டி, அசூர், பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *