Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகரில் நாளை (03.09.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (03.09.2022) சனிக்கிழமை காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. 

அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறப்படும் பகுதிகளான அரியமங்கலம், SIT,  அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்பன் நகர், ராணுவ காலனி, பாப்பாகுறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர் ஒரு பகுதி, மேலகல்கண்டார்கோட்டை,

கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், செந்தணீர்புரம், காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை ஆகிய பகுதிகளில் நாளை (03.09.2022) மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *