Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நாளை (28.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் நாளை (28.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு,மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர் மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நாளை (28.11.2023) அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் & காத்தலும், திருவரங்கம் செயற்பொறியாளர் பொறிஞர்.R.செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (28.11.2023) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், பெல்டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை (28.11.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28.11.2023) மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தா.பேட்டை, பிள்ளா துறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (28.11.2023) (செவ்வாய்க்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (28.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு, தெற்கு, கோட்டப்பாளையம், வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (28.11.2023) காலை 9.45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (28.11.2023) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையபட்டி, குப்பாப்பட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம் பட்டி, கொடம்பறை, மதுக்காம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பொத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்களம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளையகவுண்டம் பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியபட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம் பட்டி, குப்பனம்பட்டி, சொக்கம்பட்டி, அயன்பொருவாய், கொடும்பபட்டி, போலம்பட்டி, துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (28.11.2023) காலை 9:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *