கர்நாடாக மாநிலம் சாம்ராஜ் நகர், கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55). அவர் நாமக்கல் மாவட்டம், பேருந்து நிலையம் அருகே உள்ள பூபதி லாட்ஜில் சகநண்பர்களுடன் தங்கி ஊர் ஊராக சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற பொருட்கள் விற்பனை செய்துவருகிறார்.
இந்நிலையில் வளையெடுப்பு கிராமத்தில் பொருட்களை விற்பனை செய்ய வந்தபோது, சிலர் பிள்ளை புடிக்கிறவன் வந்துடான் என்று சத்தம் போட்டதாகவும், அதற்கு வெளிமாநில நபர், தான் டார்ச் லைட் மற்றும் கடிகாரம் விற்பனை செய்ய வந்துள்ளேன் என்று சொல்லிகொண்டு இருக்கும்போது, சிலர் அவரை பிடித்து தலை, முகம், உடம்பு, வலது கை மற்றும் வலது காலில் கையால் மாறி மாறி அடித்ததகவும், வலிதாங்க முடியாமல் கத்தவே யாரோ ஒருவர் போலீஸ்க்கு போன் செய்ய போலீசார் வந்து மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரை 108 ஆம்புலனஸ் மூலம் அழைத்துச்சென்று முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் வளையெடுப்பு கிராமத்தை சேர்ந்த, 1. ஆகாஸ் த.பெ விஜயகுமார், 2. மாரியப்பன் த.பெ முத்து, 3. காளிமுத்து, 4. மருதை தபெ வீரபத்திரன், 5. தினேஸ் த.பெ கோவிந்தராஜ், 6. ராஜா த.பெ சின்னசாமி, 7. சிவா த.பெ சுப்ரமணி, 8. கம்பராயன் தபெ வீரபத்திரன்,
9. பாஸ்கர் , 10.சம்பத், 11.சூரியா, 12. செல்வராஜ் த.பெ பெருமாள், 13.காளிமுத்து, 14. லோகநாதன் த.பெ கனகராஜ், 15. ராணி க.பெ கனகராஜ் ஆகிய 15 நபர்கள் மீது திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments