திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு செயல்பட துவங்கியது. மிக முக்கியமாக பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகள் அவர்களை அழைத்து வருபவர்கள் உள்ளே செல்ல அனுமதி முன்புறம் பின்புறமும் கிடையாது. பயணிகள் மட்டும் வாயிலில் இறக்கி விடப்படுவார்கள்.
ஆனால் இருசக்கர வாகனத்தில் வயதானவர்கள் பெண்கள் மற்றவர்கள் உள்ளே செல்பவர்களுக்கு தனியாக ஒரு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியே உள்ளே சென்று இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்து முனையத்திற்கு உள்ளே செல்லலாம். ஆனால் முன்புறம் பின்புறம் இரண்டு பகுதியிலும் வாயிலில் ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக இரு சக்கர வாகனத்தில் பயணிகளை பேருந்து நிலையத்திலிருந்து அழைக்க மற்றும் வழி அனுப்ப வருபவர்களை மறித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசம் அரங்கேறி வருகிறது. காவல்துறையினர் தடுத்து தடுப்பு வேலிகளை வைத்து அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருசக்கர வாகனங்கள் இங்கு செல்லக்கூடாது என்று சொல்லலாம்.
ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரும்போது ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களை தடுத்து அடாவடியாக நடந்துகொண்டு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் எங்களை தான் உள்ளே விடக்கூடாது என காவல்துறையினர் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பயணிகள் மற்றும் அவர்களை வழி அனுப்ப அழைத்துச் செல்ல வருபவர்கள் பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர காவல் துறையும் ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்தி உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments