Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தில் கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இந்த முகாமில் குமரக்குடி கிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம், பருவ கால பயிர்களின் வரைபடம், நீர்ப் பாசன வாய்க்கால்கள் வரைபடம் மற்றும் நகர ஆற்றல் வரைபடம் ஆகியவற்றை வரைந்து கிராமிய மதிப்பீட்டின் வரைபடம் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கமளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இந்நிகழ்வில் முசிறி எம். ஐ. டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் தி.அபர்னா, மூ.அபிநயா, சே.அபிராமி, ரா.அஃப்ரின் பானு, ச.க.அக்ஷயா ச.அனு, ந.அனுஶ்ரீ, ம.ஆரோக்கிய ப்ரனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *