Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாளை 14.06.2021 டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறையவும் சில தளவுர்களுடன் ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து மேலும் சில தளவுர்களுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதில் நாளை முதல் நேர கட்டுப்பாடுடன் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பாக மண்டல்  தலைவர் குரு தலைமையில் SIT அருகில் உள்ள டாஸ்மாக் அருகிலும், அம்பிகாபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும், பொன்மலையிலுள்ள டாஸ்மாக் அருகிலும் மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *