Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பாஜக இளைஞரணியினர் தேசிய கொடியுடன் பேரணி

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இருசக்கர வாகன பேரணி  திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் கௌதம் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். மேலும் தேசிய கொடி வண்ணங்கள் கொண்ட பலூன்களை பறக்க விட்டார். இப்பேரணி மாவட்ட ஆட்சி அலுவலகம் சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் இருந்து

பெரிய மிளகு பாறை, மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் நீதிமன்றம் அரசு மருத்துவமனை, வரகனேரி, மார்க்கெட் பெரிய கடை வீதி வழியாக சென்று சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை சென்று நிறைவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *