தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது, இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்மூரமாக மேற்கொண்டுவருகிறது.சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் இன்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியதுதிருச்சி மாவட்டத்தில் 171 பேர் போட்டியிடும் நிலையில்,சட்டமன்ற தொகுதி, வாக்காளர்பெயர், தந்தை மற்றும் தாயார் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண்,

வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் பாகம்எண், வரிசை எண், வாக்குப்பதிவு தேதி மற்றும் நேரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ள பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல்சீட்டு அந்தந்த பகுதி வாக்குச்சாவடி முகவர்களால் வீடுகள்தோறும் வழங்கப்பட்டுவருகிறது. இது மட்டுமின்றி நடப்பு சட்டமன்றத்தேர்தலில் ஒரு கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளும் விதமாக கியூ ஆர் கோடு ம் இடம்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 21.47லட்சம் பேருக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இன்று தொடங்கி வருகிற 17-ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று பூத்ஸ்லிப் வழங்கப்பட உள்ளது
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments