Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் கொத்தனார் அடித்து கொலை – மோதலை வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்

திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 32) கொத்தனார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (12.11.2023) விடுமுறையில் வீட்டிலிருந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகாமையில் நேற்று இரவு இரு வேறு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது இந்த தள்ளுமுள்ளு மோதலை உதயகுமார் வேடிக்கை பார்த்தார். இதில் சிக்கிக்கொண்ட அவரை ஒரு கும்பல் தள்ளிவிட்டது. இதில் அவருக்கு பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் உதயகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் திருச்சி மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நாள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிதடி மோதலை வேடிக்கை பார்த்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. 

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvisio

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *