Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இன்று மதியம் முதல் 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்கும் – தமிழக அரசு

நிவர் புயல் நேற்று இரவு காரைக்கால் மற்றும் மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இந்நிலையில் நிவர் புயலுக்காக தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

Advertisement

அதன்படி கடந்த 24ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து சேவைகளை 7 மாவட்டங்களில் ரத்து செய்து உத்தரவிட்டனர். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு புயல் கரையைக் கடந்ததும் இன்று மதியம் முதல் இந்த ஏழு மாவட்டங்களுக்கும் வழக்கம்போல பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *