Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகராட்சியே இப்படி பண்ணலாமா? – சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருச்சி மன்னார்புரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள் போன்றவற்றை கொட்டி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வந்த நிலையில் பல முறை புகார் கொடுத்து சுத்தம் செய்த பின்பும் மீண்டும் மீண்டும் அதே இடம் குப்பை, சாக்கடை கழிவுகள், கட்டிட கழிவுகளால் நிரம்பி வந்தது.

இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பாக லைவ் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்த நிலையில், இன்று காலை திருச்சி மாநகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து கொட்ட ஆரம்பித்தனர்.

இதை கண்டு அந்த ஊழியர்களிடம் சண்டையிட்ட போது வாகனத்தை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். மாநகரத்திற்குள்ளே இது போன்ற கழிவுகளை கொட்ட அனுமதி அளித்த மாநகராட்சி அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *