Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

கனரா ரோபிகோ ஏஎம்சியின் ஐபிஓவை கனரா வங்கி விரைவில் வெளியிட உள்ளது

கனரா வங்கி தனது மியூச்சுவல் ஃபண்ட் துணை நிறுவனத்தை பட்டியலிடப் போவதாக டிசம்பர் 27 அன்று தெரிவித்துள்ளது. அதற்கான காலக்கெடு குறித்து கடன் வங்கி இன்னும் எந்த கருத்து தெரிவிக்கவில்லை. “கனரா வங்கி அதன் மியூச்சுவல் ஃபண்ட் துணை நிறுவனமான கனரா ரோபெகோ அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஆரம்ப பொதுச் சலுகை (ஐபிஓ) மூலம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதற்கான செயல்முறையைத் தொடங்குவதற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

வகுக்கப்பட்ட நடைமுறைகள், சரியான நேரம், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் போன்றவை,” குறித்து இவ்வங்கி ஒரு அறிக்கை வெளியீட்டு மூலம் கூறியுள்ளது. பட்டியலிடப்பட்டால், HDFC AMC, Nippon Life India AMC, UTI அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் AMC ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவில் பட்டியலிடப்படும் ஐந்தாவது AMC இதுவாக இருக்கும். பட்டியலிடும் முறைகள் குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என கனரா வங்கி தெரிவித்துள்ளது.

“இது குறித்து கூடுதல் அறிவிப்புகளை வங்கி விரைவில் வெளியிடும்,” என்று கூறியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் கனரா வங்கியின் பங்குகள் 1.78 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 432.60க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது. சமீபகாலமாக வெளியீட்டை கொண்டு வந்த பெரும்பாலான ஐ.பி.ஓக்கள் சோடை போகவில்லை என்பது குறிப்படித்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *