Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முருகன் கோவில் அறங்காவலர்கள் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் துறையூரில் அருள்மிகு ஸ்ரீ கோலோச்சும் முருகன் திருக்கோயிலில் உள்ளது. முருகனுக்கான சிறப்பு பெற்ற இக்கோவிலை ஜானகிராமன் என்பவரால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. அவர் மறைவிற்க்கு பிறகு கோவில் நிர்வாகத்தை பராமரிக்க அவரது வாரிசுகளான கதிரவன், ஜெயசித்ரா, சந்தான லட்சுமி, நடேசன், பரணிதரன் மற்றும் பத்மப்ரியா ஆகியோர்கள் பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், கோவிலில் நடைபெறும் அனைத்து விசேஷ நிகழ்ச்சியின் போது ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த இரண்டு வருடமாக நடைபெறும் விசேஷ நிகழ்சியில் ஒருவருக்கு ஒருவர் ஆலோசிக்காமல் தங்களுக்குள் கோவில் வளாகத்திலேயே சண்டையிட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையையும், நம்பகத்தன்மையையும் கோவில் புனிததன்மை இழந்து வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஏற்றார் போல் 2023 டிசம்பர் மாதம் நடைப்பெற்ற சனி பெயர்சி விழா அன்றைய முதல் நாள் அறங்காவலர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதுதொடர்பாக இரு தரப்பினரின் புகாரின் பேரில் துறையூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

திருக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாகவே பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தலையிட்டு நிர்வாக அதிகாரியை நியமனம் செய்து திருக்கோயிலையும், திருக்கோயில் புனிதத்தையும், வளர்ச்சியையும் பாதுகாத்திட முன் வரவேண்டும் என துறையூர் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *