திருச்சி பொன்மலைபட்டியில் ‘அன்புச்சோலை’ முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க வந்தபோது, தவெக துண்டு கழுத்தில் அணிந்துக்கொண்டு எதிரே நின்ற, திருச்சி தெற்கு மாவட்ட தவெக மகளிர் அணி பொன்மலை பகுதி இணை அமைப்பாளர் ராஜேஸ்வரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகர பொன்மலை காவல் நிலையத்தில், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
முதல்வர் சாலை மாற்றமாக சென்ற பொழுது மாடியில் இருந்து பெண்மணி தமிழக வெற்றிக்கழக துண்டை கையில் வைத்து ஆட்டி உள்ளார்
இதனை பார்த்து திமுகவினர் குரல் எழுப்பிய பொழுது காவல்துறையினர் அவரை பிடித்து மாலை 6:00 மணி வரை விசாரித்து தகவல்களை பெற்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments