திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா குற்றவியல் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நடந்தது சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார்.விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.

செயலாளர் பி.வி. வெங்கட் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். மேலும் நீதிபதிகள் அனு சுருதி, பரம்வீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வழக்கறிஞர்கள் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பரிமாறி மகிழ்ந்தனர்.

விழாவில் மூத்த வழக்கறிஞர் ஸ்டேனிஸ்லாஸ், வழக்கறிஞர்கள் ஜேசுபால்ராஜ், கிறிஸ்டோபர் சத்யராஜ், விக்கிரமாதித்தன் , நாகராஜன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

சங்கத்தின் துணைத் தலைவர் சசிகுமார்,பிரபு இணைச் செயலாளர் விஜய் நாகராஜன் , செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன்,எழிலரசி,
ரங்கீலா, அருண் சித்தார்த், விஜி, பிரியா, ஜானி, கம்பன், அர்ஜுன் மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி. வி. வெங்கட் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments